Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகா சிவராத்திரி நாளில் சிவனுக்கு அபிஷேகம் செய்ய ஏற்ற பொருட்கள்...?

மகா சிவராத்திரி நாளில் சிவனுக்கு அபிஷேகம் செய்ய ஏற்ற பொருட்கள்...?
மகா சிவராத்திரி என்பது மிகவும் புனிதமானது என்பது அனைவருக்கும் தெரியும். சிவராத்திரியன்று அனைவரும் விடிய விடிய விழித்து சிவனை நினைத்து மனம் உருகி பாடுவது வழக்கம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சிவராத்தியன்று, எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தபொருளை கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்  என்பதை பார்க்கலாம்.
 
ராசி மற்றும் அபிஷேக பொருள்:
 
மேஷம் - வெல்லம் கலந்த நீர் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
ரிஷபம் - இந்த ராசிக்காரர்கள் தயிர் கொண்டு அபிஷேகம் செய்தால் பணப் பிரச்சனைகள நீங்கும்.
மிதுனம் - சிவ லிங்கத்திற்கு கரும்பு சாறு கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
கடகம் - சர்க்கரை சேர்த்த பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். மந்தாரைப் பூ கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.
சிம்மம் - பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
கன்னி - இந்த ராசிக்காரர்கள் பாங் பால் நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
துலாம் - பசும் பாலால் இந்த ராசிக்காரர்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
விருச்சிகம் - இந்த ராசிக்காரர்கள் தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் அபிஷேகம் செய்யலாம்.
தனுசு  - இந்த ராசிக்காரர்கள் குங்குமப்பூ கலந்த பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
மகரம் - இந்த ராசிக்காரர்கள் சிவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வில்வம் பழத்தை படைக்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (26-02-2019)!