சரஸ்வதி தேவியை வாக்தேவி, சாரதா, பாரதி, பிராமி, வீணாவாதினி, வாணி எனப் பலபெயர்களால் அழைக்கப்படும் சரசுவதி தேவி தோன்றிய நாளாக வசந்த பஞ்சமி கருதப்படுகிறது. ஓம் அறிவுருவே போற்றி ஓம் அறியாமை தீர்ப்பாய் போற்றி ஓம் அன்பின் வடிவே போற்றி ஓம் அநுபூதி அருள்வாய் போற்றி ஓம் அறிவுக்கடலே போற்றி ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி ஓம் அன்ன வாகினியே போற்றி ஓம் அகில லோக குருவே போற்றி ஓம் அருளின் பிறப்பிடமே போற்றி ஓம் ஆசான் ஆனவளே போற்றிஓம் ஆனந்த வடிவே போற்றி ஓம் ஆதாரசக்தியே போற்றி ஓம் இன்னருள் சுரப்பாய் போற்றி ஓம் இகபர சுகம் தருவாய் போற்றி ஓம் ஈர நெஞ்சம் கொண்டாய் போற்றி ஓம் ஈடேறச் செய்பவளே போற்றி ஓம் உண்மைப் பொருளே போற்றி ஓம் உள்ளத்து உறைபவளே போற்றி ஓம் ஊமையை பேசவைத்தாய் போற்றி ஓம் எண்ணம் நிறைவேற்றுவாய் போற்றிஓம் ஏடு கையில் ஏந்தியவளே போற்றி ஓம் ஓங்கார வடிவினளே போற்றி ஓம் கலைக் களஞ்சியமே போற்றி ஓம் கற்போர்க்கு இனியவளே போற்றி ஓம் கலைஞானச் செல்வியே போற்றி ஓம் கரை சேர்க்கும் கண்ணே போற்றி ஓம் கலைவாணித் தெய்வமே போற்றி ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி ஓம் காயத்ரியாய் அருள்பவளே போற்றி ஓம் குருவாக உபதேசிப்பவளே போற்றிஓம் குறை தீர்த்தருள்வாய் போற்றி ஓம் குணக் குன்றானவளே போற்றி ஓம் குற்றம் பொறுப்பவளே போற்றி ஓம் சந்தேகம் போக்குவாய் போற்றி ஓம் சச்சிதானந்தப் பொருளே போற்றி ஓம் சாந்த சொரூபினியே போற்றி ஓம் சான்றோர் நெஞ்சினளே போற்றி ஓம் சாரதாம்பிகையே போற்றி ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி ஓம் சித்தியளிப்பவளே போற்றிஓம் சுருதிக்கு ஆதாரமே போற்றி ஓம் சுத்தஞான வடிவே போற்றி ஓம் ஞானக்கடலானாய் போற்றி ஓம் ஞானம் தந்தருள்வாய் போற்றி ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி ஓம் ஞானேஸ்வரியே போற்றி ஓம் ஞானத்தின் வரம்பே போற்றி ஓம் ஞான ஆசிரியையே போற்றி ஓம் ஞானத்தின் காவலே போற்றி ஓம் தவத்தில் ஆழ்ந்தவளே போற்றிஓம் தகைமை தருபவளே போற்றி ஓம் தஞ்சம் அளிப்பவளே போற்றி ஓம் தாயான தயாபரியே போற்றி ஓம் தண்ணருள் தருவாய் போற்றி ஓம் துதித்தவர்க்கு துணையே போற்றி ஓம் நவமி தேவதையே போற்றி ஓம் நவராத்திரி நாயகியே போற்றி ஓம் நன்னெறி தருபவளே போற்றி ஓம் நலம் அளிப்பவளே போற்றி ஓம் நாவிற்கு அரசியே போற்றிஓம் நல்லவர்களின் மனமே போற்றி ஓம் நா நயம் அருள்வாய்போற்றி ஓம் நான்மறை நாயகியே போற்றி ஓம் நாவில் உறைபவளே போற்றி ஓம் நாதத்தின் தலைவியேபோற்றி ஓம் நாத வெள்ளமானாய் போற்றி ஓம் நித்திய ஒளிவடிவே போற்றி ஓம் நிமலையாய் நின்றவளே போற்றி ஓம் நித்தம் வளர்பவளே போற்றி ஓம் நிறைவு அளிப்பவளே போற்றிஓம் நுட்பம் கொண்டவளே போற்றி ஓம் பண்ணின் இசையே போற்றி ஓம் பாட்டின் ஆதாரமே போற்றி ஓம் பாவலர் நாடும் பண்பே போற்றி ஓம் பிரணவ சொரூபமே போற்றி ஓம் பிரம்மனின் நாயகியே போற்றி ஓம் பிரம்ம ஞான வடிவே போற்றி ஓம் பிறவிப்பிணி அறுப்பாய் போற்றி ஓம் பூரண வடிவானவளே போற்றி ஓம் புவனத்தைக் காப்பவளே போற்றிஓம் புத்தகத்தில்உறைபவளே போற்றி ஓம் மனம்வாக்கு கடந்தவளே போற்றி ஓம் மங்கல வடிவானவளே போற்றி ஓம் மந்திரப் பொருளானவளே போற்றி ஓம் மாயையை அழிப்பவளே போற்றி ஓம் முனிவர் நெஞ்சமர்ந்தாய் போற்றி ஓம் முற்றறிந்த அறிவே போற்றி ஓம் முக்காலம் உணர்ந்தவளே போற்றி ஓம் மூலமந்திர வடிவினளே போற்றி ஓம் மூல நாளில் வந்தவளே போற்றிஓம் முக்தி அளிப்பவளே போற்றி ஓம் மேதையாக்குபவளே போற்றி ஓம் மேன்மை தருபவளே போற்றி ஓம் யாகத்தின் பலனே போற்றி ஓம் யோகத்தின் பயனே போற்றி ஓம் வழித்துணை வருவாய் போற்றி ஓம் வரம் அருள்பவளே போற்றி ஓம் வாணி சரஸ்வதியே போற்றி ஓம் வாக்கின் நாயகியே போற்றி ஓம் வித்தக வடிவினளே போற்றிஓம் வித்யா லட்சுமியே போற்றி ஓம் வெண்கலை பூண்டவளே போற்றி ஓம் வெள்ளை மனத்தாளே போற்றி ஓம் வெண்தாமரையினாளே போற்றி ஓம் வீணை ஏந்தியவளே போற்றி ஓம் வீட்டின்பம் தருவாய் போற்றி ஓம் வேதத்தின் உட்பொருளே போற்றி ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி போற்றி…