Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சில பின்பற்றப்படும் ஆன்மீக தகவல்கள் பற்றி பார்ப்போம்...!!

சில பின்பற்றப்படும் ஆன்மீக தகவல்கள் பற்றி பார்ப்போம்...!!
விநாயகருக்கு சாற்றிய அருகம் புல் மாலையை உதிர்த்து அதை நன்றாக காய விட்டு வியாழன், பௌர்ணமி அம்மாவசை அன்று தூபம் போடா தீய சக்திகள் இருந்தால் விலகி ஓடும். இதை வியாபார இடத்திலும் செய்யலாம்.

தொட்ட சிணுங்கி, முடக்கத்தான், துளசி, வில்வம், கற்றாழை போன்ற செடிகள் வீட்டில் வளர்த்தால் கண் படுத்தல், ஏவல், சூன்யம், எதிர் வினைகள் போன்ற தீய  சக்திகள் எளிதில் வீட்டிற்குள் வராது.
 
வீட்டில் விக்ரங்களை வைத்து வழிபாடு செய்பவர்கள் கறவை பசும் பால், தேங்காய் நீர், அரைத்த சந்தானம் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
 
மயில் தோகை வீட்டில் வைத்து இருப்பது முருகனின் ஆசிகள் கிடைக்கும்.
 
கோவிலகளில் அபிஷேகத்திற்கு கறவை பசும் பால் மட்டும் தரவும். அல்லது இளநீரை தரவேண்டும். இவைகள் உங்கள் சந்ததி அனைவரின் பாபத்தையும், சாபத்தை போக்கும் வல்லமை உடையது.
 
வெள்ளை மிளகு, கடுகு, காய்ந்த வில்வ இலைகள், நாய் கடுகு, பால் சாம்பிராணி, கடுக்காய், காய்ந்த வேப்ப இலைகள், ஓமம், தான்றி காய், காய்ந்த மருதாணி இலை, மஞ்சள் இவைகளை நன்றாக கலந்து அமாவாசை, பௌர்ணமி, வெள்ளிகிழமை போன்ற நாட்களில் தூபம் போடுவது சகல நன்மைகளை தரும். குல  சாமிகளின் ஆசிகள் கிடைக்கும்.
 
எந்த ஒரு நல்ல காரியம் துவங்க வெளியில் செல்லும் பொழுது அருகில் உள்ள விநாயகருக்கு ஒரு தேங்காய் உடைப்பதும், பசுவிற்கு வாழை பழம் தருவதும்  துவங்கும் காரியம் வெற்றியடைய செய்யும்.
 
கொப்பரை தேங்காயை துண்டுகளாகி அதை தூபமாக பெருமாளுக்கு காண்பிக்க பெருமாளும் கருப்பு சாமியும் குலத்தை காப்பார்.
 
ஒரே நாளில் 9 வகையான லிங்க மூர்த்திகளை தரிசனம் செய்ய சனிதேவரின் ஆசிகள் பெற்று, ஆயுள் தோஷம் நீங்கி ஆரோக்கியம் ஏற்படும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குபேர விளக்கை எந்த நேரத்தில் ஏற்றுவது நல்லது..? ஏற்றும் முறை என்ன...?