Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூஜை அறையில் எந்த சாமி படங்களை வைக்க கூடாது ஏன்....?

Webdunia
பூஜை அறையில் நாம் வணங்கும் சாமி படங்களை வைத்து தான், நமது வாழ்க்கையின் தரமும் உயரும். எனவே பூஜை அறையில் எந்த உருவங்களை வைக்க வேண்டும், எந்த உருவங்களை வைக்கக் கூடாது என சில சாஸ்திர கருத்துக்கள் உள்ளன. அதை முறைப்படி  பின்பற்றினால் எப்போதும் நன்மையே நடக்கும்.
சனீஸ்வர பகவானின் படங்களை இல்லங்களிலோ அல்லது பூஜை அறையிலோ வைக்கக் கூடாது. நடராஜரின் உருவ படத்தை வீட்டில்  வைக்க கூடாது.
 
கடவுளின் உருவமானது மிகவும் ஏழ்மையாக இருந்தால் அதாவது மொட்டை அல்லது கோவனம் கட்டிய முருக பெருமானின் படத்தை  படத்தை வீட்டு பூஜை அறையில் வைக்க கூடாது. கோபமாக இருக்கக் கூடிய காளியின் படத்தை வீட்டில் வைத்து பூஜிக்கக் கூடாது.


 
தலைக்கு மேல் வேல் இருக்கும் முருகனின் படத்தை பூஜை அறையில் வைக்கக் கூடாது. ருத்ர தாண்டவமாடும் உருவம், கொடூர பார்வை  உள்ள உருவம், தவம் செய்யும் மற்றும் தலைவிரிகோலங்களில் உள்ள சாமி படங்களை வீட்டில் வைத்து பூஜை செய்யக் கூடாது. இது  மட்டுமில்லாமல் வீட்டில் உடைந்த சிலைகள், சிதைந்த சாமி சிலைகள், கிழிந்த உருவ படங்கள் போன்றவற்றை வீட்டில், வைத்து பூஜை  செய்யக் கூடாது.
 
பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத்  திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால்  தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments