Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நவக்கிரகங்களில் செவ்வாயின் ஆதிக்கம் நிரம்ப பெற்ற போகர்!!

நவக்கிரகங்களில் செவ்வாயின் ஆதிக்கம் நிரம்ப பெற்ற போகர்!!
சித்தர் எனப்படுபவர்கள் இந்த உலகம் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளை புரந்தள்ளியவர்கள். ஆலயம் செல்லுதல், விக்ரகங்களை பூஜித்தல், ஆசார சடங்குகளில் நாட்டம் கொள்ளுதம் என்பதெல்லாம் விடுத்து தங்களுக்குள்ளேயே இறைவனைக் கண்டு இன்புற்றவர்கள்.
சித்தர்களுள் போகர் பெரிதும் வேறுபட்டே தெரிகிறார். பல சித்தர்கள் போல், இவரும் ஒரு சிவத்தொண்டரே அதே சமயம், அன்னை உமையை  தியானித்து அவளருளையும் பெற்றவர். அவளது உபதேசம் கேட்டு பழனி மலைக்குச் சென்று தவம் செய்து முருகனை தண்டாயுத  பாணியாகவே தரிசனம் செய்தவர்.
 
பழனிமலையில் தவம் செய்யும் போது முருகப் பெருமான் அவருக்கு காட்சி கொடுத்து என்னை விக்ரமாக செய்து இந்த இடத்தில் பிரதிஸ்டை  செய் என்று கூறி மறைந்தார். அதன் படி நவபாசானம் என்ற ஒன்பது வித மூலிகை கலவையால் முருகனின் மூல விக்ரகத்தை பிரதிஷ்டை  செய்தார். அதன் பின் பழனி மலையிலேயே வாழ்ந்த சித்தர் அங்கேயே ஜீவ சமாதி ஆனார்.
webdunia
உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக தான் தரிசித்த தண்டாயுதபாணிக்கு நவபாஷாணத்தால் சிலை எடுத்தவர். அதில் உயர்வான பாஷாணங்கள் ஒன்பதை தேர்வு செய்து அதைக் கொண்டு போகர் செய்ததுதான் பழனிமுருகனின் மூலத் திரு உருவம்.
 
இன்றும் பழனிமலையில் உள்ள கோவிலின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் சித்தர் போகரின் ஜீவசமாதி உள்ளது. நவக்கிரகங்களில் செவ்வாய் பகவானின் ஆதிக்கம் நிரம்ப பெற்றவர் சித்தர் போகர், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் கிழமைகளில் இவரை  வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கி நல்அருள் பெறுவர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிரகங்களில் ஆற்றலை ஈர்க்கும் தன்மை கொண்ட முத்திரைகள்...!!