Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இறைவன் உங்கள் உருவத்தையோ செல்வங்களையோ பார்ப்பதில்லை: நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள்...!!

இறைவன் உங்கள் உருவத்தையோ செல்வங்களையோ பார்ப்பதில்லை: நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள்...!!
இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும்  பார்க்கின்றான்.
தன் நாவையும், வெட்கத்தலத்தையும் ஒருவர் பாதுகாத்து கொள்வதாக பொறுப்பேற்றால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை, உங்களிடம் கர்வமும், வீண்விரயமும்  இருக்கக்  கூடாது.
 
* குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன்  ஆவான். உனது தந்தையின் அன்பை நீ பாத்துக்காத்து கொள். அதை முறித்து விடாதே அவ்வாறு அதை முறித்து கொண்டால் இறைவன்  உனது  ஒளியை போக்கி விடுவான்.
 
* தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறை நம்பிக்கையாளராய் இருக்க முடியாது. பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச்சிறந்த தர்மமாகும்.
 
* தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும், நல்லோக்கப் பயிற்சியும் ஆகும். உம்முடைய உறவை துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழு. உமக்கு அநீதம் இழைத்தவனை மன்னித்து விடும்.
 
* நற்குணம் என்பது நம்பிக்கைக்குரிய அடையாளமாகும். தீயகுணம் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும். நெருப்பு விறகைச் சாம்பலாக்கி  விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சில விருட்சங்களின் தெய்வீக சக்திகளும் அதன் பலன்களும்...!