Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை விரட்டும் வழி என்ன தெரியுமா...?

வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை விரட்டும் வழி என்ன தெரியுமா...?
வீட்டில் செல்வம் பெருக வாஸ்து பொருட்கள் வாங்கி வைப்பது, சிரிக்கும் புத்தர் வாங்கி வீட்டில் வைப்பது, நவரத்தின மரம் வீட்டில் இருப்பது போன்ற பலவகையான விஷயங்கள் நம் வீட்டுக்குள் வருகின்றன.
அப்போதும் செல்வ வளம் ஏற்படவில்லை என்று வருந்துபவர்கள் அவர்கள் வீட்டில் உள்ள இந்த எட்டு விஷயங்களை நீக்குவதன் மூலம் செல்வம் பெருகி ஐஸ்வர்யம் சித்திக்கும் என்று முன்னோர் கூறியுள்ளனர்.
 
* வீட்டில் சிலந்தி வலை என்னும் ஒட்டடை இருக்கவே கூடாது, அப்படி இருப்பின் துரிதமாக அதனை நீக்கி விட வேண்டும்.
 
* புறாக்கூடு என்பது வீடுகளில் கட்டாயம் இருக்க கூடாது. புறாக்கூடுகள் இருந்தால் வீட்டில் ஸ்திர தன்மை நீங்கி விடும் என்று கூறப்படுகிறது. பொருளாதாரத்தில் ஏற்ற தாழ்வுகள் இருந்து கொண்டே இருக்கும் என்றும், வீட்டில் உள்ளோரின் உடல்நிலை ஒரு நாள் போல ஒரு நாள் இருக்காது என்றும், புறாக்கூடு இருக்கும் இடங்களில் வறுமை என்பது வீடு தேடி வரும் என்பது ஐதீகம்.
 
* பொதுவாக இல்லங்களிலோ அல்லது அதன் அருகிலோ தேன்கூடு இருக்க கூடாது. ஏனெனில் தேனீக்கள் கடின உழைப்பாளிகள் என்றாலும் தேன் கூடு வீட்டில் இருந்தால் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும், கடன் தொல்லைகள் ஏற்படும் வறுமை வளரும் நிலை உள்ளது. 
* வீட்டில் உள்ள நிலைக்கண்ணாடிகள் மஹாலக்ஷ்மியின் அம்சம். அவை உடைந்தோ சேதாரமான முறையிலோ இருக்க கூடாது என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் உடைந்த கண்ணாடி பொருட்கள் எதுவாக இருந்தாலும் அவைகள் அகற்றப்பட வேண்டும். 
 
* ஒரு வீட்டில் வவ்வால் குடியேறுவது என்பது துரதிர்ஷ்டத்தின் அடையாளம். நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
 
* தண்ணீர் குழாய்களில் சில சமயம் நீர் வீணாகி கொண்டே இருக்கும். இது போன்று ஏற்பட்டால் உடனடியாக அந்த நீர்க்குழாயை சரி செய்ய வேண்டும்.
 
* பூஜை அறையிலோ அல்லது வீட்டின் எந்த இடத்திலும் காய்ந்த பூக்கள் இருக்க கூடாது. எதிர்மறை சக்திகளை வீட்டுக்குள் வரவழைக்கும் குணம் காய்ந்த பூக்களுக்கு உண்டு. 
 
* மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது விரிசல் இல்லாத சுவர்கள். இப்படி இருந்தால் உடனடியாக அந்த விரிசல்களை சரி செய்து வர வேண்டும். சின்ன விரிசல்தானே என்று அலட்சியப்படுத்தி விட கூடாது, இதனை பார்ப்பதால் மனதிற்குள் எதிர்மறை எண்ணங்கள் உண்டாகும். வீட்டின் செல்வ வளம் குறையும். ஆகவே சுவர் விரிசல்களை உடனடியாக சரி செய்வது அவசியம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈசான மூலையில் இருக்கக்கூடாத பொருட்கள் எவை தெரியுமா....?