Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முருகப்பெருமானின் திருவுருவங்கள் எத்தனை உண்டு தெரியுமா...?

முருகப்பெருமானின் திருவுருவங்கள் எத்தனை உண்டு தெரியுமா...?
1. ஞானசக்திதரர்: முருகன் என்றால் அழகு மட்டுமல்ல. அவன் கைத்திருவேல் ஞானத்தின் ஸ்வரூபம். ஒரு செயலை தொடங்கி அது வெற்றிப் பெற இந்த கோலத்தில் உள்ள முருகனை வழிபடலாம்.

2. கந்தசாமி: பழனிமலையில் கோலோச்சும் தண்டாயுதபானி ஆண்டவரே கந்தசாமி திருக்கொலத்தில் இருப்பவர். இவரை வழிபட்டால் சகல காரியங்களும்  சித்தியாகும்.
 
3. ஆறுமுக தேவசேனாபதி: குமரனை தேவ சேனாதிபதி என்றும் அழைப்பார்கள். தேவர்களுக்காக படையை முன்னின்று நடத்தி அசுரர்களை சம்காரம் செய்தவர். 
 
4. சுப்பிரமணியர்: நாகை மாவட்டத்திலுள்ள திருவிடைகழி முருகன் கோயில் மூலவரே சுப்பிரமண்யர் ஆவார். சுப்பிரமண்யர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவர்.
 
5. கஜவாகனர்: யானை மீதிருக்கும் முருகப் பெருமானை இதுவரை பார்த்தது உண்டா ? திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோயில் கீழைக் கோபுரம் ஆகிய இடங்களில் யானை மீதிருக்கும் கஜவாகனர் திருவுருவத்தைப் பார்க்கலாம். 
 
6. சரவணபவர்: சென்னிமலை, திருப்போரூர் ஆகிய இடங்களில் சரவணபவரின் திருவடிவத்தைப் பார்க்கலாம். 
 
7. கார்த்திகேயர்: கேட்டவுடன் சகல சவுபாக்கியங்களும் தரும் கார்த்திகேயரின் திருவுருவம் கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரம் ஐராவதீச்வரர் கோயிலிலும் காணலாம்.
 
8. குமாரசாமி: முருகனின் குமாரசாமி கோலத்தை வழிபடுபவர்களுக்கு ஆணவம் அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலில் இவரது திருவடிவம் காணலாம். 
 
9. சண்முகர்: சிவனையும் சக்தியையும் ஒரு சேர வழிபட்ட பலனை அடைய விரும்புபவர்கள் சண்முகரை வழிபடலாம். திருச்செந்தூரில் உள்ள முருகனின்  அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும்.
 
10. தாரகாரி: விராலி மலையில் உள்ள முருகன் கோயிலில் அருள்பாலிப்பவரே தாரகாரி. 'தாரகாசுரன்' என்னும் அசுரனை அழித்ததால் இவருக்கு தாரகாரி என்ற பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
 
11. சேனானி: பகை அழியவும், பொறாமை நீங்கவும், போட்டிகளில் வெற்றிகிடைக்கவும், சேனானி என்னும் முருகனின் அருட்கோலத்தை தரிசித்தால் போதும். தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது.
 
12. பிரம்மசாஸ்தா: இவரை வழிபட்டால் எல்லா வகைவித்தைகளிலும் தேர்ச்சி பெறலாம். சகலவித கலையறிவும் அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சி கிட்டும். 
 
13. வள்ளிகல்யாணசுந்தரர்: பெயருக்கு ஏற்றார் போல், திருப்போரூர் முருகன் கோயில் தூண் ஒன்றில் காட்சித் தரும் வள்ளிக் கல்யாண சுந்தரரை வழிபட்டால், திருமணத்தடைகள் விரைவில் அகலும். 
 
14. பாலசுவாமி: உடல் ஊனங்களையும், குறைகளையும் அகற்றும் தெய்வம் பாலசுவாமி. இவரை வழிபடுபவர்களுக்கு உடல் நலம் கிடைக்கும். 
 
15. சிரவுபஞ்சபேதனர்: இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். 
 
16. சிகிவாகனர்: மயில் மீது அமர்ந்திருக்கும் முருகனின் அருட்கோலத்தை, நாம் செல்லும் ஆலயம் பலவற்றில் பார்த்திருப்போம். தன்னை வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு அளிப்பவர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (08-06-2021)!