Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெளர்ணமி நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள் !!

பெளர்ணமி நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள் !!
, திங்கள், 17 ஜனவரி 2022 (15:45 IST)
புரட்டாசி மாத பெளர்ணமியில், குலதெய்வத்தை மனதார வழிபட்டு , பிரார்த்தனை செய்தால், மகத்தான பலன்களைப் பெறலாம். வீட்டில் இதுவரை இருந்த தரித்திர நிலையில் இருந்து விடுபடலாம்.


பெளர்ணமி, முழு நிலவு வானில் பிரகாசமாகத் தோன்றும் அற்புதமான நாள். இந்த நாளில், நல்ல அதிர்வலைகள் உலகில் வியாபித்திருக்கும். அப்பேர்ப்பட்ட சக்தி மிகுந்த நாளில், குலதெய்வ வழிபாடு செய்வது தீயசக்தியில் இருந்து நம்மைக் காக்கும்.

குலதெய்வம் கோயிலுக்குச் சென்று பெளர்ணமி நன்னாளில் வழிபடுங்கள். வாழ்வில் இதுவரை பட்ட கஷ்டத்தில் இருந்து விடுபடுவீர்கள்.

அதேபோல், வீட்டில் விளக்கேற்றி, லலிதா சகஸ்ரநாமம் சொல்லி வழிபடுவதும் வீடு மனை முதலான செல்வங்களை வாங்குகிற பாக்கியத்தைக் கொடுக்கவல்லது.

ஒவ்வொரு பெளர்ணமியிலும் மாலையில், சந்திரன் தோன்றும் வேளையில், வீட்டில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து  குலதெய்வத்தை ஆராதிப்பது விசேஷமானது.  தம்பதி இடையே ஒற்றுமை மேலோங்கும்.

பெளர்ணமி நாளில், குல்தெய்வ வழிபாடு மிக மிக முக்கியமானது. இந்த நன்னாளில், குலதெய்வக் கோயில் அருகில் இருந்தால், சென்று வழிபட்டு வருவது நன்மைகளை வாரி வழங்கும். சந்ததியினர் சிறக்க வாழ்வார்கள்.

குலதெய்வம் பூர்வீகக் கிராமத்தில், வெளியூரில் என்றிருந்தால், மாதந்தோறும் பெளர்ணமி நாளில், குலதெய்வக் கோயிலுக்குச் செல்வது இயலாததாக இருந்தால், வீட்டில் விளக்கேற்றி குலதெய்வ வழிபாடு செய்யலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பதினெட்டு சித்தர்களின் தலைமையிடமாக விளங்கும் சதுரகிரி மலையின் சிறப்புக்கள் !!