Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செவ்வாய் கிழமைகளில் முருகப்பெருமான் வழிபாட்டு பலன்கள் !!

செவ்வாய் கிழமைகளில் முருகப்பெருமான் வழிபாட்டு பலன்கள் !!
, செவ்வாய், 8 மார்ச் 2022 (10:28 IST)
செவ்வாய் கிழமைகளில் முருகப்பெருமானை வழிபாடு செய்வது மிகவும் உகந்தது, சக்தியானது. கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகப் பெருமான்.


செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமியினால் தீராத பிரச்னைகள் உள்ளவர்களும் இவ்விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும்.

செவ்வாய்க்கிழமை காலையில் நீராடி முடித்து, அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்கு சென்று வழிபடவேண்டும்.

பின்னர் வீடு திரும்பியதும் பால், பழச்சாறு மட்டும் அருந்தி முருகனின் திருநாமங்களை கூறி விரதம் இருக்கலாம். மாலையில் மீண்டும் கோவிலுக்கு சென்று முருகனை வழிப்பட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும்.

இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்தால் செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கிவிடும் என்பது உறுதி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பஞ்சமி திதியில் விரதம் இருந்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் !!