Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர்வ ஏகாதசியில் விரதம் இருந்து வழிப்படுவதால் உண்டாகும் பலன்கள் !!

சர்வ ஏகாதசியில் விரதம் இருந்து வழிப்படுவதால் உண்டாகும் பலன்கள் !!
, திங்கள், 14 மார்ச் 2022 (15:43 IST)
பொதுவாகவே, மாதந்தோறும் வரும் ஏகாதசியும் விரதத்துக்கு உரிய அற்புதமான நாள்தான். நம்மில் நிறைய பக்தர்கள், மாத ஏகாதசியில், மாதம் தவறாமல் விரதம் மேற்கொண்டு, பெருமாளை சேவிப்பவர்கள் இருக்கிறார்கள்.


ஏகாதசி நாளில், விரதம் இருந்து, ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு, நாலாயிர திவ்விய பிரபந்தம் முதலான பாடல்களைப் பாடி, துளசி தீர்த்தம் பருகி, மகாவிஷ்ணுவை ஆராதிப்பது மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்பது ஐதீகம்.

அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வேண்டிக் கொண்டால், மனதில் உள்ள குழப்பங்கள் யாவும் விலகும். மனக்கிலேசம் நீங்கும். புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் உண்டாகும்.

அந்த வகையில், மாசி மாத ஏகாதசி ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. முடிந்தவர்கள் விரதம் இருக்கலாம். நாராயண நாமம் சொல்லி, துளசி தீர்த்தம் பருகலாம். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, பெருமாளை வழிபடலாம்.

துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்யுங்கள். முடிந்தால், புளியோதரை நைவேத்தியம் செய்து, பசித்திருப்போருக்கு வழங்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காரடையான் நோன்பு எதற்காக ஏன் கடைப்பிடிக்கப்படுகிறது...?