Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கேற்றுவதால் கிடைக்கும் பலன்கள் !!

பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கேற்றுவதால் கிடைக்கும் பலன்கள் !!
பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணி வரையாகும். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறை வழிபாட்டை மேற்கொண்டு பின் அந்நாளில் செய்யவேண்டிய நமது வேலையை செய்ய துவங்கினால் அன்று முழுவதும் செய்யும் அனைத்து செயல்களிலும் வெற்றி கிட்டும். 

பிரம்ம முகூர்த்ததில் எவ்வாறு வழிபட வேண்டுமென்றால் பெண்கள் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து முடித்து நெற்றியில் திலகமிட வேண்டும். பின் வீட்டினையும், பூஜை அறையும் சுத்தம் செய்ய வேண்டும். பூஜை அறையில் மாகோலமிட்டு விளக்கை ஏற்ற வேண்டும். ஏதேனும் ஒரு பிரசாதத்தை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். 
 
நம் வேண்டுதலை மனமுருகி பிரார்த்தனை செய்து வழிபட வேண்டும். இவ்வாறு செய்யும் போது நம் மனதில் நினைத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி  நடைபெறும். 
 
பிரம்ம முகூர்த்தத்தில் இறைவழிபாடு மேற்கொள்வது பலமடங்கு புன்ணியத்தை நமக்கு தேடித் தரும். இந்நேரத்தில் விளக்கேற்றி வழிபடுவது மேலும் சிறப்பு வாய்ந்ததாகும். மாலை நேரத்தில் விளக்கேற்றி வழிபடுவதை காட்டிலும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கேற்றி வழிபடுவது பல்வேறு பலன்களை அள்ளித் தரும்.
 
தொழில் தொடங்குதல், கணபதி ஹோமம், கிரகப்பிரவேசம், திருமணம், என எந்த ஒரு காரியத்தையும் பிரம்ம முகூர்த்தத்தில் செய்தால் நிச்சயம் வெற்றி  கிடைக்கும்.
 
இந்த நேரத்தில் விளக்கேற்றி வழிபடுவதால் கிரக தோஷம், ராகு, கேது தோஷம், களத்திர தோஷம் போன்ற தோஷ பாதிப்பு உள்ளவர்களுக்கு பிரம்ம முகூர்த்ததில்  திருமணம் செய்து வைத்தால் தோஷ நிவர்த்தி அடைந்து அவர்களின் வாழ்க்கையும் சிறந்து விளங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
 
பிரம்ம முகூர்த்த நேரத்தில் தேவர்கள், தேவதைகள், திருமால், சிவபெருமான், மாகலக்ஷ்மி போன்ற தெய்வங்கள் நமக்கு வான்வெளியில் அருள்பாலிப்பதாக  ஐதீகம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா...?