Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாழைத்தண்டு நாரை திரியாக கொண்டு தீபம் ஏற்றினால் கிடைக்கும் பலன்கள் !!

வாழைத்தண்டு நாரை திரியாக கொண்டு தீபம் ஏற்றினால் கிடைக்கும் பலன்கள் !!
வீட்டில் தீபம் ஏற்றுவது ஆன்மீக ரீதியாக ஒரு மிக சிறந்த விசயமாகவே கருதப்படுகிறது. அதே போல் தீபத்தில் போடப்படும் திரியை பொறுத்து அதற்கான பலன்களும் மாறுபடுகிறது.

வாழைத்தண்டு நாரை திரியாக திரித்து அதில் தீபம் ஏற்றினால் முன்னோர்களின் சாபங்கள் விலகும். அதோடு ஏதேனும் தெய்வக் குற்றங்கள் இருந்தால் அதுவும் விலகி வீட்டில் அமைதி உண்டாகும்.
 
வாழை நாரில் செய்யப்பட்ட‍ திரியை பயன்படுத்தி விளக்கேற்றினால் குடும்பத்தில் இருக்கும் சகலவிதமான பிரச்சினைகளும் காணாமல் போகும். மேலும் நிலம்  தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்குவதோடு குடும்பத்தில் அமைதியும், செல்வமும் நிறையும் என்று சொல்லப்படுகிறது.
 
வீட்டில் தீபம் ஏற்றுவதற்கான உகந்த நேரம் என்னவென்றால், காலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை அதாவது சூரிய உதயத்திற்கு முன்பு விளக்கு ஏற்ற  வேண்டும். அதேப்போல் மாலை நேரத்தில் 6 மணிக்கு பிறகு விளக்கு ஏற்ற வேண்டும். இவ்வாறு வீட்டில் இந்த நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் நாம்  செய்யும் அனைத்து செயல்களிலும் நன்மை உண்டாகும். அதேப்போல் புண்ணியம் கிடைக்கும்.
 
மேலும் திருமணத்தடை, கல்வித்தடை நீங்க, மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் தீபம் ஏற்றி வந்தால் இந்த தடைகள்  நீங்கும்.
 
வாழைத்திரியில் நார் திரித்து வீட்டில் விளக்கேற்றி வந்தால் வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். அதேப்போல் குடும்பத்தில் அமைதியும், செல்வமும்  நிறைவாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன...?