Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விளக்கு ஏற்றி முடிந்ததும் இத்தனை விஷயங்கள் உள்ளதா...?

விளக்கு ஏற்றி முடிந்ததும் இத்தனை விஷயங்கள் உள்ளதா...?
வாரம் ஒருமுறை விளக்கேற்றும் போது கட்டாயம் விளக்கினை தேய்த்து விட்டு ஏற்றுவது நல்லது. இல்லை என்றால் மறுவாரம் நீங்கள் பார்க்கும் பொழுது அந்த எண்ணெய் திரியுடன் சேர்ந்து பச்சை நிறமாக மாறி இருக்கும். இது வீட்டில் பண தடையை உண்டாக்கும் ஒரு செயலாகும்.

திரி கருகும் முன், எண்ணெய் காலியாகும் முன் மலர்களால் நெருப்பினை அணைத்து விடுவது தான் நல்லது. வாயால் ஊதக்கூடாது. ஒற்றை திரியாக போடக் கூடாது.
 
எப்போதும் இரண்டு திரிகளை இணைத்து தான் போடவேண்டும்.  மீண்டும் மறுநாள் விளக்கேற்றும் பொழுது அதே திரியில் ஏற்றலாம் தவறில்லை. திரி கருகி விட்டால் அல்லது நிறம் மாறி விட்டால் மட்டும் அதை மாற்றினால் போதுமானது. 
 
தினமும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இந்த திரிகளை குப்பையில் கட்டாயம் வீசக்கூடாது. திரியை குப்பையில் போட்டால் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி வெளியே சென்று விடுவாள். இந்த தவறையும் ஒருபோதும் செய்யாதீர்கள்.
 
தினமும் திரியை மாற்றுபவர்களாக இருந்தாலும், அல்லது வாரம் ஒரு முறை மாற்றினாலும் திரிகளை சேர்த்து வைக்க வேண்டும். தேவையில்லாத ஏதாவது ஒரு பிளாஸ்டிக் பவுலில் சேர்த்து வைத்து வாருங்கள். 
 
கொஞ்சம் திரிகள் சேர்ந்ததும் வீட்டில் இருக்கும் அனைவரையும் கிழக்கு முகமாக பார்த்து உட்கார வையுங்கள். இதனை இரவு சாப்பிட்டு முடித்த பின்னர் தூங்க செல்லும் முன் செய்வது நல்லது.  அந்த திரிகளை தூப காலில் போட்டு கொள்ளுங்கள். 
 
பின்னர் அப்படியே அனைவரையும் சேர்த்து வலமிருந்து இடமாக மும்முறை மற்றும் இடமிருந்து வலமாக மும்முறை திருஷ்டி கழித்து விடுங்கள். திருஷ்டி கழித்து முடிந்ததும் வீட்டு வாசலில் வைத்து அதனை கொளுத்தி விடுங்கள். முழுக்க எரிந்து முடிந்ததும், வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் இந்த நெருப்பில் பஸ்பமாகிவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜாதக ரீதியான சில தோஷங்களை நீக்க ராமாயணத்தில் எந்தெந்த கட்டத்தை படிக்க வேண்டும் தெரியுமா...?