Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஹா பெரியவரின் அற்புத பொன்மொழிகள் !!

Webdunia
அன்பால் பிறரைத் திருத்தி நல்வழிப்படுத்த முடியும். அன்பால் ஒருவரை திருத்தினாலும் கூட அது பெருமை தரும் விஷயம் தான்.

* பாவ புண்ணியம் என்பது செயலைப் பொறுத்தது அல்ல. செயலாற்றுபவரின் நோக்கத்தைப் பொறுத்தது. நற்செயலாக இருந்தாலும் நோக்கம் தவறானதாக இருந்தால் அது பாவக்கணக்கில் தான் சேரும்.
 
* தியானம் செய்வது பிறருக்குத் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. மனதுக்குள் தாயாரைச் சதா நினைத்துக் கொண்டிருந்தால் போதும்.
 
* ஆசை, கோபம், துவேஷம், பயம் ஆகிய தீயசிந்தனைகளை மனதை விட்டு அடியோடு அகற்ற வேண்டும். உயர்வு தரும் நல்ல சிந்தனைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
 
* ஒருபோதும் விருப்பு வெறுப்புடன் செயலாற்றுவது கூடாது. மனச் சமநிலையுடன் செயலாற்றும் போது உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. அகந்தையுணர்வு இல்லாமல் மனிதன் கடமைகளைச் செய்யவேண்டும்.
 
* அறியாமை என்பது வியாதிக்குச் சமமானது. அறியாமை நம்மிடம் இருக்கும் வரை மகிழ்ச்சி உண்டாகாது. 
 
* எந்த வீட்டில், யார் இறக்கும் தறுவாயிலிருந்தாலும் யாரும் கூப்பிடாமலேயே அங்கு சென்று 1008 தடவை ராமநாமம் சொல்லிவிட்டு வர வேண்டும். அந்த ஆத்மா முக்தி அடைந்துவிடும். இது ஜீவாத்ம கைங்கர்யம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments