தமிழ்நாடு, தமிழ் இலக்கியம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் கொண்ட நூலாக வெளி வந்துள்ளது தமிழியல் தேற்றங்களும் தீர்வுகளும் என்ற நூல்.
இந்த புத்தகத்தின் வாயிலாக பழந்தமிழ்நாடு பற்றியும், பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றியும் பேராசிரியர் க.ப. அறவாணன் நீண்ட ஆராய்ச்சிகள் செய்து பல உண்மைகளை வெளிப்படுத்துகிறார்.
குமரிக்கண்டம் (லெமுரியா) பற்றியும், உலகில் தோன்றிய முதல் இளம் தமிழ் இனம் என்று வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பது பற்றியும் அவர் வெளியிட்டுள்ள ஆணித்தரமான கருத்துக்கள் தமிழ் நெஞ்சங்களைப் பூரிக்கச் செய்யும்.
தமிழார்வம் உள்ளவர்கள், ஆராய்ச்சியாளர்கள் படிக்க வேண்டிய புத்தகம் இது. தமிழ்க்கோட்டம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. நூலின் விலை ரூ.110 ஆகும்.