Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒலிம்பிக் போட்டி: மன்னிப்பு கோரிய இந்திய வீரர்கள்

ஒலிம்பிக் போட்டி: மன்னிப்பு கோரிய இந்திய வீரர்கள்

ஒலிம்பிக் போட்டி: மன்னிப்பு கோரிய இந்திய வீரர்கள்
, செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (21:10 IST)
ஒலிம்பிக் போட்டியில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து தீபா கர்மாகர் மற்றும் விகாஸ் கிருஷ்ணன் ஆகியோர் மன்னிப்பு கோரினார்கள்.


 

 
இந்தியா சார்ப்பில் ஒலிம்பிக் போடியில் பங்கேற்ற வீரர்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் ஜிம்னாஸ்டிக் பெண்கள் வால்ட் பிரிவில் 0.15 புள்ளியில் பதக்கத்தை விட்ட தீபா கர்மாகர், இந்திய மக்களிடம் மன்னிப்பு கோரினார்.
 
இந்தியா ஒலிம்பிக் போட்டியில் பெருமைப்படுத்திய ஒரே வீராங்கனை தீபா கர்மாகர். முதன்முறையாக இந்திய பெண்கள் ஜிம்னாஸ்டிக் சார்பில் கலந்து கொண்டு இறுதிப் போட்டிக்கும் சென்று வரலாறு படைத்தார்.
 
அதே போல் 75 கிலோ எடை பிரிவினருக்கான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற விகாஸ் கிருஷ்ணன் கால் இறுதி போட்டியில் தோல்வியை தழுவினார். அவரும் ஒலிம்பிக் போட்டியில் தோல்வியடைந்ததற்கு மன்னிப்புக் கோருவதாக தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒலிம்பிக் போட்டி: குத்துச்சண்டை பிரிவு காலிறுதியில் இந்தியா தோல்வி