Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் போட்டி: குத்துச்சண்டை பிரிவு காலிறுதியில் இந்தியா தோல்வி

ஒலிம்பிக் போட்டி: குத்துச்சண்டை பிரிவு காலிறுதியில் இந்தியா தோல்வி

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (17:48 IST)
ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் ஆடவர் 75 கிலோ பிரிவு காலிறுதி போட்டியில், இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் தோல்வியுற்றார்.



 

 
உஸ்பெகிஸ்தானின் பெட்டமீர் மெலகீசியாவை எதிர்த்து களமிறங்கிய விகாஸ் கிருஷ்ணன், ஆரம்பம் முதலே உஸ்பெகிஸ்தான் வீரரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தடுமாறினார். இறுதியில் 0-3 என்ற புள்ளி கணக்கில் தோல்வியுற்ற விகாஸ் கிருஷ்ணன் ரியோயோ ஒலிம்பிக்ஸிலிருந்து வெளியேறிய இந்திய வீரர்களின் பட்டியலில் சேர்ந்து விட்டார்.
 
ஏற்கனவே, இந்திய குத்துச்சண்டை வீரர்கள் ஷிவா தாபா மற்றும் மனோஜ் குமார் ஆகியோர் தோல்வியுற்ற நிலையில், விகாஸ் கிருஷ்ணனின் தோல்வியால் குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு முடிவுக்கு வந்துள்ளது.
 
இது வரை ஒலிம்பிக் போட்டிகளில், ஆடவர் பிரிவில் இந்தியாவின் சார்பாக பதக்கம் வென்றது விஜேந்தர் சிங் மட்டுமே. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில், விஜேந்தர் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments