Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சில உதாரணங்கள் மூலம் உடலுக்குள் ஆத்மா உண்டா? என்பதை உணர்த்தும் உண்மை

Advertiesment
ஆத்மா
உடலுக்குள் ஆத்மா உண்டா? அது அழிந்து போகாதா? உடல் அழிந்து போகிறதே? என்பதை பற்றி சீடனின் கேள்விக்கு குருவின் விளக்கம் என்னவென்று பாருங்கள்.


 
 
உடலுக்குள் ஆத்மா உண்டா? அது அழிந்து போகாதா? உடல் அழிந்து போகிறதே? என்று சீடனின் கேள்விக்கு குரு விளக்கினார்.
 
” பால் ”
பயனுள்ளதுதான்…
ஆனால் அதை அப்படியே விட்டால் கெட்டுப்போகும்..
 
அதில் ஒரு துளி
உறை மோர் விட்டால் பால் தயிராகி விடும் கெடாது…
 
தயிரான பால் இன்னும் ஒரு நாள் தான் தாங்கும்…
அப்படியே விட்டால் கெட்டுப் போகும்…
 
அதைக் கடைய வேண்டும்…. கடைந்தால் வெண்ணெய்
ஆகி விடும் கெடாது…
 
வெண்ணெய் ஆன பால் பல நாள் தாங்காது….
அப்படியே விட்டால் கெட்டுப் போகும்….
 
அதை உருக்க வேண்டும்…
சரியாக உருக்கினால் சுத்தமான நெய் ஆகிவிடும்…
 
அந்தப் பரிசுத்தமான நெய் கெடவே கெடாது……
 
கெட்டுப் போகும் பாலுக்குள்
கெடாத நெய் இல்லையா??
அதுபோலத்தான்…
 
அழிந்து போகும் உடலுக்குள் அழியாத ஆன்மா உண்டு…
 
இந்த உதாரணத்தின் மூலம் உடலுக்குள் ஆத்மா உண்டா? இல்லையா? என்ற கேள்விக்கு பதில் கிடைத்துருக்கும் என நம்புகிறோம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷீரடி சாய் பாபாவின் வாழ்நாளில் நிகழ்த்திய அற்புதங்கள்