Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: மீண்டும் மேம்பாலங்களில் பார்க்கிங் செய்யப்பட்ட கார்கள்..!

Mahendran
வியாழன், 12 டிசம்பர் 2024 (16:20 IST)
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், பல இடங்களில் தண்ணீர் தேங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மீண்டும் மேம்பாலங்களில் பொதுமக்கள் கார்களை நிறுத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில், கடந்த 2014 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏராளமான கார்கள் பழுதடைந்து, பல லட்ச ரூபாய் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை மறந்துவிடாமல், தற்போது பொதுமக்கள் கனமழை பெய்தால் உடனே கார்களை பாலங்களில் நிறுத்த தொடங்கி விடுகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு முதல் சென்னையில் தொடர் கனமழை பெய்து வருவதால், சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் மீண்டும் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல், ராயபுரம் மேம்பாலமும் பார்க்கிங் பகுதியாக மாறியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இன்றும் மழை பெய்தால், அண்ணா மேம்பாலம் உள்பட மேலும் சில பாலங்களில் கார்கள் நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments