Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி வரும் ஒவ்வொரு மாணவருக்கும் 20 மாத்திரைகள்: தமிழக அரசு உத்தரவு!

Webdunia
வியாழன், 14 ஜனவரி 2021 (09:24 IST)
பள்ளி வரும் ஒவ்வொரு மாணவருக்கும் 20 மாத்திரைகள்
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் முதல் கட்டமாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கும் என்றும் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது 
 
மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்றும் சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியுடன் வகுப்பறையில் உட்கார வேண்டும் என்றும் தமிழக அரசு நெறிமுறைகள் ஆக நேற்று அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதுமட்டுமின்றி மாணவர்களை பள்ளிக்கு வரும் வரை வரும்படி கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் மாணவர்கள் விருப்பப்பட்டால் பள்ளிக்கு வரலாம் அல்லது ஆன்லைன் மூலம் கற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது
 
இந்த நிலையில் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு தலா 10 மல்டிவிட்டமின் மாத்திரை மற்றும் 10 ஜிங்க் மாத்திரை வழங்கவும் அதை மாவட்டங்களில் உள்ள வேர்ஹவுசில் இருந்து பெற்று பள்ளிகளுக்கு வினியோகம் செய்யவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவால் பள்ளிக்கு வரும் ஒவ்வொரு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 10 மல்ட்டி வைட்டமின் மாத்திரைகளும் 10 ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments