ஜாபர் சாதிக்கின் குடோனிற்கு சீல்..! முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள்.!!

Senthil Velan
வியாழன், 14 மார்ச் 2024 (17:11 IST)
சோதனை நிறைவு பெற்றதை அடுத்து, ஜாபர் சாதிக் குடோனிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
 
போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கை 7 நாட்கள் காவலில் எடுத்து மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். சென்னை மற்றும் திருச்சியில் உள்ள ஜாபர் சாதிக்கின் குடோன்களில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்பட்டது தெரிய வந்தது.  

ஜாபர் சாதிக்கின் நண்பரான சதா, இந்த குடோன்களில் இருந்து போதைப்பொருளை மசாலா உள்ளிட்ட பொருட்களுடன் கலந்து அனுப்பி கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்ததை அடுத்து, சென்னை பெருங்குடியில் செயல்பட்டு வந்த ஜாபர் சாதிக்கின் குடோனில் 5-க்கும் மேற்பட்ட மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

ALSO READ: போதை பொருள் விவகாரம்.! ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு இபிஎஸ் மீது திமுக வழக்கு..!!

வீட்டை குடோன் போல நடத்தி வந்த நிலையில்,  வீட்டின் உரிமையாளரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் குடோனில் இருந்து போதைப் பொருளை எடை போடும் மிஷின், பேக்கிங் மிஷின், புகைப்படங்கள் சிலவற்றை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.  சோதனை நிறைவு பெற்றதை அடுத்து, அந்த குடோனிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாலையில் மீண்டும் குறைந்த தங்கம்.. இன்று ஒரே நாளில் 3000 ரூபாய் சரிவு..!

ஒரே இரவில் இந்திய இளைஞர் கோடீஸ்வரர் ஆன அதிசயம்.. ஐக்கிய அரபு அமீரகம் கொடுத்த ஜாக்பாட்..!

பவர் பாலிடிக்ஸ்! வெடிக்கும் கோஷ்டி மோதல்... கிருஷ்ணகிரி உபிகளுக்கு டிமிக்கி கொடுக்கும் அமைச்சர் சக்கரபாணி!

மேற்குவங்க மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்.. வகுப்பு தோழன் தான் முக்கிய குற்றவாளி.. விசாரணையில் அதிர்ச்சி..!

மெஸ்ஸி ஏன் வரவில்லை.. கேள்வி கேட்ட நிருபரை தள்ளிய கேரள விளையாட்டு துறை அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments