Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முப்படை தலைமை தளபதி மரணம் தொடர்பாக சர்ச்சை கருத்து: மாரிதாஸ் கைது

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (17:51 IST)
முப்படை தலைமைத் தளபதி மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக யூட்யூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

 
பிரபல யூட்யூபரான மாரிதாஸ் முன்னதாகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சில முறை கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது முப்படை தலைமைத் தளபதி மரணம் தொடர்பாக சர்ச்சை கருத்து தெரிவித்த புகாரில் யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.  
 
விமானப்படை, மத்திய அரசின் கருத்துகளுக்கு எதிரான கருத்தை மாரிதாஸ் பதிவிட்டுள்ளார் என காவல்துறை சார்பில் தெரிவித்துள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்து மாரிதாஸ் தனது கருத்தை சமூக வலைதளத்தில் நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நேற்று நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்களின் உடல் டெல்லி கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments