Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

Advertiesment
youtube

Siva

, புதன், 21 மே 2025 (16:01 IST)
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக, ஹரியானாவை சேர்ந்த யூடியூப்பர்  ஜோதி மல்கோத்ரா கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில், அதேபோல் வேறு சில யூடியூபர்களையும் காவல்துறை கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. இதில் சிலர் தமிழக யூடியூபர்கள் என்றும் கூறப்படுவதால், அது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீப காலமாக, சில சர்ச்சைக்குரிய செயல்களை செய்து, ஆளும் கட்சியின் ஆதரவால் தப்பித்து வருகிற யூடியூபர் ஒருவரும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. 
 
அதேபோல், தமிழகத்திலேயே அதிக ஃபாலோயர்களை வைத்து கொண்டு பொது பிரச்சனைகளை அலசி வீடியோக்களை வெளியிட்டு வருகிற நபர் ஒருவரையும் விசாரணை செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
யூடியூபர்கள் தங்கள் வருமானத்திற்காக எல்லை மீறி சில செய்திகளை வெளியிட்டு வருகிற சூழ்நிலையில், இனிமேல் அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து, யூடியூபர்களை கட்டுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!