முதல்வருடன் காலால் செல்ஃபி எடுத்த ’தன்னம்பிக்கை’ இளைஞர் : கனிமொழி எம்.பி டுவீட் !

Webdunia
செவ்வாய், 12 நவம்பர் 2019 (16:17 IST)
இன்றைய அரசியல் நிலவரத்தில் அவ்வளவு ஆட்சி அதிகார பீடத்தில் அமர்ந்திருப்பவர்களை நாம் அனுகிவிட முடியாது. ஆனால் இன்று கேரள மாநில பினராயி விஜயன் அவர்கள், ஒரு மாற்றுத்திறனாளி இளைஞருடன் செல்பி எடுத்துக்கொண்டார். அதில் என்ன ஆச்சர்யம் என்றால், அந்த இளைஞர் தன்னம்பிக்கையுடன் கால்களால் செல்பி எடுத்ததார். அப்போது முதல்வர் இளைஞரின் கால்களை தொட்டு நலம் விசாரித்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அதுதான் இன்றைய ஹாட் நியூஸ் மற்றும் வைரல் போட்டோவாக சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இதுகுறித்து திமுக.,வைச் செர்ந்த கனிமொழி எம்பி தனது டுவிட்டர் கூறியுள்ளதாவது, பணிவு மற்றும் மாற்றத்தின் உதாரணம் எனப் பதிவிட்டு இந்த போட்டோவை பதிவிட்டுள்ளார்.
 
இத்தனை எளிமையான முதல்வரான பினராயி விஜயனை  இன்றைய அரசியல் சூழலில் இந்தியா கண்டு கொண்டுள்ளது. ஏற்கனவே தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, அவரை நெருங்கிய ஒரு மாற்றுத்திறனாளி இளைஞர் அவரது தோளில்  கைபோட்டு போட்டோ எடுத்துக்கொண்டார். அப்போது முதல்வர் பழனிசாமி சிரித்துக்கொண்டே அதை ஏற்றுக்கொண்டார்.

இது மாற்றத்திற்கான நேரம் .. என பலரும் குரல் கொடுத்து வரும் வேளையில்,  அரசியல்வாதிகளும் ஆள்வோரும், அதிகாரிகளும் மக்களால் நெருங்க முடிந்த அளவு எளிமையாக இருந்தால் அது உண்மையான மாற்றத்திற்கு வழிகோலும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 நோட்டுகளில் 'பண மழை' : பெங்களூருவில் நூதன மோசடி செய்த 10 பேர் கைது!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தோல்வி: முதல் நாளே தோல்வியா? என்ன நடந்தது?

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. இதுதான் காரணமா?

சாம்சங் கேலக்ஸி AI-இல் குஜராத்தி உள்பட 22 மொழிகள்.. மேலும் என்னென்ன வசதிகள்?

ரயில்வே பணியாளரிடம் பெட்சீட் கேட்ட ராணுவ வீரர் கொலை.. ஏசி கோச்சில் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments