Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிஜிபி சைலேந்திரபாபுவை நேரில் பார்க்க வேண்டும்: 200 அடி உயர டவரில் ஏறி இளைஞர் மிரட்டல்..!

டிஜிபி சைலேந்திரபாபுவை நேரில் பார்க்க வேண்டும்:  200 அடி உயர டவரில் ஏறி இளைஞர் மிரட்டல்..!
, திங்கள், 26 ஜூன் 2023 (10:48 IST)
தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை பார்க்க வேண்டும் என்று 200 அடி உயர செல்போன் டவரில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நாமக்கல்லில் பெட்ரோல் கேனுடன் செல்போன் டவரில் ஏறிய இளைஞர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். அந்த இளைஞரின் பெயர் சுரேஷ் என்று முதல் கட்ட தகவலில் செய்யவந்துள்ளது. 
 
அவர் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை நேரில் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மீது பதினைந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தற்போது அம்பலமாக உள்ளது.
 
இந்த நிலையில் நீண்ட போராட்டத்திற்கு பின் அந்த இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் செல்போன் கோபுரத்திலிருந்து பத்திரமாக கீழே இறக்கி உள்ளனர். இந்த நிலையில் அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுரையில் கலைஞர் நூலகம் திறக்கும் தேதி அறிவிப்பு..!