Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை: உருக்கமான கடிதம்..!

நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை: உருக்கமான கடிதம்..!
, செவ்வாய், 2 மே 2023 (14:22 IST)
நிதி நிறுவனத்தில் 12 லட்சம் ரூபாய் வரை இழந்த இளைஞர் ஒருவர் மன விரக்தியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் உருக்கமாக எழுதிய கடிதம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
ஐஎஃப்எஸ் என்ற நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்த வேலூரை சேர்ந்த பிரசாந்த் என்ற இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிதி நிறுவனத்தில் 12 லட்சம் வரை டெபாசிட் செய்ததாகவும் ஆனால் பணம் தனக்கு திருப்பி கிடைக்கவில்லை என்றும் என்னுடைய மரணத்திற்கு ஐஎஃப்எஸ்  நிறுவனம் தான் காரணம் என்றும் தனது கடிதத்தில் எழுதியுள்ளார். 
 
மேலும் என்னை போல பணத்தை இழந்தவர்களுக்கு பணத்தை அரசு மீட்டு திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் அவர் கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட வெங்கடேசிடம் பணத்தை கொடுத்து ஏமாந்ததாகவும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார் அவரது தற்கொலை அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி: தேர்வுத்துறையின் முக்கிய தகவல்...!