இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை! காதல் விவகாரம் காரணமா? - மயிலாடுதுறையில் பரபரப்பு!

Prasanth K
செவ்வாய், 16 செப்டம்பர் 2025 (11:34 IST)

மயிலாடுதுறையில் நேற்று இரவு இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மயிலாடுதுறை மாவட்டம் அடியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா (28). இவர் அங்கு பைக் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த பல ஆண்டுகளாக காதல் இருந்து வந்துள்ளது. இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததுடன், காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். 

 

அதன்பேரில் இருவீட்டாரையும் போலீஸ் அழைத்து விசாரித்தபோது, அந்த பெண் இளையராஜாவைதான் திருமணம் செய்துக் கொள்வேன் என உறுதியாக இருந்துள்ளார். அதோடு இந்த விவகாரம் முடிந்த நிலையில், நேற்று இரவு மெக்கானிக் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்ட இளையராஜாவை மர்ம கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளது.

 

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கொலை செய்வதவர்களை போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். அதில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த கொலைக்கு காதல் விவகாரம் காரணமா? அல்லது வேறு ஏதும் முன்பகை இருந்ததா? என்பது குறித்து போலீஸ் விசாரித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களுக்கு ஒன்னு சொல்றேன்!.. தவெகா போராட்டத்தில் போலீசை சீண்டிய புஸி ஆனந்த்!..

நாளை கன மழை எச்சரிக்கை.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்... எச்சரிக்கை அறிவிப்பு

எஸ்ஐஆர் தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு.. அதிமுக அறிவிப்பு..!

சென்னையில் 96 என்ற புதிய அரசு பேருந்து.. தாம்பரம் முதல் அடையாறு வரை..!

சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. சுகாதாரத்துறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments