Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் இளைஞர் மரணம்: மருத்துவமனை விளக்கம்

Advertiesment
கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் இளைஞர் மரணம்: மருத்துவமனை விளக்கம்

Mahendran

, வெள்ளி, 15 நவம்பர் 2024 (11:38 IST)
சென்னை கிண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த விக்னேஷ் என்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்து விட்டதாகவும் மருத்துவர்கள் இல்லாததால் இளைஞர் உயிரிழந்து விட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி வாக்குவாதம் செய்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது

பித்தப்பை கல் சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் பெற்று, நோய் தீவிரத்துடன் விக்னேஷ் மருத்துவமனை வந்தார். விக்னேஷ் அழைத்து வரப்பட்ட அன்று அனைத்து மருத்துவர்களும் பணியில் இருந்தனர்.

குடல் நோய் வார்டில் அனுமதிக்கப்பட்ட அவர் அவசர பிரிவுக்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இறந்த விக்னேஷ்க்கு முறையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

முன்னதாக மருத்துவர்கள் போராட்டத்திற்கு சென்றதால் சிகிச்சை அளிக்க வரவில்லை என்றும் அதனால் தகுந்த சிகிச்சை கிடைக்காததால் விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்து விட்டதாகவும் எமர்ஜென்சி வார்டில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை அளிக்க எந்த மருத்துவரும் வரவில்லை என்றும் விக்னேஷ் உறவினர்கள் கூறியுள்ளனர்.


Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?