Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் விவகாரத்தில் மாணவி கழுத்தறுத்துக் கொலை - இளைஞர் கைது

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2023 (14:56 IST)
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள ராதாபுரம் கிராமத்தில் வசிக்கும் சுகன் என்பவரின் மகள் தரணியை ஒரு வாலிபர் கழுத்தறுத்துவிட்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள ராதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுகன். இவரது,  மகள் தரணி( 19 வயது). அங்குள்ள தனியார் கல்லூரியில் செவிலியர் படிப்பு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், தரணி தன் வீட்டிலிருந்த தோட்டத்த்ல் இருந்தபோது, தோட்டத்தில் மறைந்திருந்த இளைஞர் ஒருவர் தரணியைப் பிடித்து, அவரது கழுத்தறுத்துவிட்டு, தப்பியோடிவிட்டார்.

தரணியின் அலறல் சத்தம் கேட்டு, குடும்பத்தினர் தோட்டத்திற்குச் சென்று பார்த்தபோது, அங்கே ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், தரணியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து, காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில்,  கணேஷ்(25) என்ற இளைஞரை தரணி காதலித்து வந்ததாகவும், கணேஷ் கஞ்சாவுக்கு அடிமையானதால், அவரிடம் பேச தரணி மறுத்து வந்ததாகவும், இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது, கணேஷ், தரணியைக் கொலை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வீட்டில் தனியாக இருந்த மாணவியை இளைஞர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments