Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒவ்வோர் ஆண்டிலும் உன் புகழ்மட்டம் கூடிக்கொண்டே போகிறது.! கருணாநிதி குறித்து வைரமுத்து புகழாரம்.!!

Senthil Velan
புதன், 7 ஆகஸ்ட் 2024 (12:58 IST)
குடகுமலை மழையால் மேட்டூர் நீர்மட்டம் உயர்வது மாதிரி ஒவ்வோர் ஆண்டிலும் உன் புகழ்மட்டம் கூடிக்கொண்டே போகிறது என்று மறைந்த கருணாநிதியின் நினைவு நாளையொட்டி கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.
 
தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் மறைந்த தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 6வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
 
இதையொட்டி கட்சி தொண்டர்களும், அரசியல் பிரமுகர்களும் இன்று அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர். அதில் குறிப்பாக பல இடங்களில் திமுகவினர் அமைதி ஊர்வலத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளமான சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவில் பின்வருமாறு:
 
உன் 
பிறந்தநாளுக்கும்
நினைவுநாளுக்கும்
வேறுபாடு ஒன்றுண்டு
 
நீ பிறந்த நாளில்
ஒரே ஒரு தாய்க்கு மட்டுமே
பிள்ளையாகினாய்
 
நினைவு நாளில்
தாய்த் தமிழ் நாட்டுக்கே
மகனாகினாய்
 
குடகுமலை மழையால்
மேட்டூர் நீர்மட்டம்
உயர்வது மாதிரி
ஒவ்வோர் ஆண்டிலும்
உன் புகழ்மட்டம்
கூடிக்கொண்டே போகிறது
 
வணங்குகிறோம் உங்களை;
வாழ்த்துங்கள் எங்களை
 
நினைவிடம்
கோபாலபுரம்
சி.ஐ.டி காலனி
அஞ்சலியின்போது...

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தற்கொலை தாக்குதல் நடத்தியது இந்தியாவா? பழி போடத் துடித்த பாகிஸ்தான்! - அம்பலமான உண்மை!

வக்ஃப் திருத்த மசோதாவை திரும்ப பெற வைப்போம்: ஜவாஹிருல்லா ஆவேசம்

சட்டக்கல்லூரிக்கு மாணவி செல்லாமல் இருந்திருந்தால் அந்த சம்பவம் நடந்திருக்காது: TMC எம்.எல்.ஏ சர்ச்சை கருத்து..!

வேகத்தடையில் ஏறி இறங்கியபோது ஆம்புலன்ஸில் இருந்து தூக்கி வீசப்பட்ட நோயாளி: நீலகிரியில் அதிர்ச்சி சம்பவம்..!

திடீர்னு விஐபி லைன் போட்டாங்க.. ஒரே கேட் வழியே போகணும் வரணும்? - பூரி ஜெகன்நாதர் கூட்ட நெரிசல் பலி காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments