Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி சென்ற மாணவி பலாத்காரம்; காட்டிக் கொடுத்த வயிறு! – சிக்கிய இளைஞன்!

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (08:51 IST)
ராமநாதபுரத்தில் பள்ளி சென்ற மாணவியை தொடர்ந்து பாலியல் தொல்லை செய்து வந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த பகுதியை சேர்ந்த 27 வயதான ஸ்டீபன் ராஜ் என்பவன் சிறுமியை தினமும் தொடர்ந்து சென்றதுடன், அடிக்கடி சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார். இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என அவர் மிரட்டியதால் சிறுமி இதை யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.

கிட்டத்தட்டை ஓராண்டு காலமாக இந்த கொடுமை நடந்த நிலையில் சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார். வயிறு பெரிதாக தொடங்கியதை கண்டு பெற்றோர் விசாரித்தபோது இந்த உண்மை தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஸ்டீபன் ராஜை கைது செய்த போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..! சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும்.! ராகுல் காந்தி..!!

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

அடுத்த கட்டுரையில்