Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேருந்தில் தடுமாறி விழுந்த வாலிபர்.. நெஞ்சை பதறவைத்த சம்பவம்

பேருந்தில் தடுமாறி விழுந்த வாலிபர்.. நெஞ்சை பதறவைத்த சம்பவம்
, வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (20:22 IST)
திருப்பூர் மாவட்டத்தில் மோட்டார் பைக் மீது அரசுப் பேருந்து உரசியதால் பேருந்தில் சிக்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் முத்துச்செட்டிபாளையத்தைச் சேர்ந்த அருண்குமார்  என்பவர், கடந்த 30 ஆம் தேதி அவிநாசி பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு அருகில் வலதுபுறமாக சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து அருண்குமாரின் மோட்டார் பைக்கின் மீது உரசியுள்ளது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது அந்த பேருந்தின் பின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உசுற பணயம் வைச்சு திருட வந்தா... கல்லாவ தொடச்சு வைச்சுருக்க..ஏமாற்றத்தில் திருடனின் கடிதம் !