Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீன் வாங்க போன வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்…

Webdunia
ஞாயிறு, 21 ஜூலை 2019 (10:09 IST)
தஞ்சாவூரில் மீன் வாங்க போன நபர் லாரி மோதி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவர் நேற்று காலை மீன் வாங்குவதற்காக குருவி கரம்பை பகுதிக்கு அருகே உள்ள மீன் மார்க்கெட்டிற்கு மோட்டார் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அச்சமயத்தில் மீன் மார்க்கெட் அருகே, எதிரே வேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக நீலகண்டன் மீது மோதியது. இந்த விபத்தில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே நீலகண்டன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து நீலகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மீன் வாங்க சென்றவர் பரிதாபமாக லாரியில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

திடீரென சாலையின் நடுவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வாகனங்கள் சேதம்..!

அன்புமணியை சந்திக்க மாட்டேன்: சென்னை வந்த டாக்டர் ராமதாஸ் பேட்டி..!

இனிமேல் கனமழை தான்.. வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு..!

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments