Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது திருமணம் செய்த 4 மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் - காரணம் என்ன?

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2017 (11:49 IST)
இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நான்கே மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

புதுச்சேரியை அடுத்த பாகூர் திருமால் நகரை சேர்ந்தவர் முருகராஜ் (35). இவரது மனைவி ஏற்கனவே இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடலூர் சாவடியை சேர்ந்த கலா (27) என்ற இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.

கலாவுக்கு ஏற்கனவே திருமணமாகி அவரது கணவர் இறந்து விட்டார். கலாவை கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் முருகராஜ் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு கலா வீட்டு வராண்டாவில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ’முருகராஜை திருமணம் செய்த நாளில் இருந்து, முதல் மனைவி குழந்தைகளை கலா பாசத்துடன் கவனித்து வந்ததாகவும், ஆனால், குழந்தைகள் குருவி நத்தத்தில் வசிக்கும் தங்கள் தாயை அடிக்கடி சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை விரும்பாத கலா இது குறித்து கணவர் முருகராஜிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். இதேபோல் நேற்றும் அந்த குழந்தைகள் குருவி நத்தம் சென்று தாயை சந்தித்து பேசி விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த கலா தூக்கிட்டு இறந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

இதுகுறித்து பாகூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணமாகி 4 மாதமே ஆன நிலையில் தூக்கிட்டு இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சர்ச்சை வீடியோவை நீக்கிய இர்பான்.. கைது செய்யப்பட வாய்ப்பா?

பிரிவினையை தூண்டும் மோடி.! பொதுவாழ்க்கையில் இருந்து விலக வேண்டும்..! மல்லிகார்ஜுன கார்கே.!!

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்.! கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!!

மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சை பேச்சு..! பாஜக வேட்பாளர் பிரச்சாரம் செய்ய தடை..!!

17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments