Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளாரா கருணாநிதி?

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2017 (11:35 IST)
திமுக தலைவர் கருணாநிதி வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசிய விவகாரம் திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
உடல் நலக்குறைவு காரணமாக, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதி கடந்த டிசம்பர் மாதம் 23ம் தேதி வீடு திரும்பினார். அதன்பின் அவர் எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. அவர் பெயரில் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.
 
திமுகவின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் நியமிக்க நடந்த பொதுக்கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை. அவர் ஓய்வில் இருப்பதால் அவரை சந்திக்க தொண்டர்கள் வர வேண்டாம் என திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அந்நிலையில், கருணாநிதி இன்னும் 15 நாட்களில் மக்கள் பணியாற்ற வருவார் என திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கடந்த 25ம் தேதி கூறினார்.
 
இந்நிலையில், சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,  கருணாநிதி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு புகார் கூறினார். அத்துடன் கிளாடியேட்டர் படத்தில் அரச பதவிக்காக, மகனே தந்தையை கொலை செய்யும் காட்சியையும் அவர் குறிப்பிட்டு பேசினார்.
 
இந்த விவகாரம் திமுக வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments