Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளிப்பதை படம் பிடித்து மிரட்டிய இளைஞர்: மாணவி எடுத்த விபரீத முடிவு

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (15:17 IST)
கோவையில் இளம்பெண் குளிப்பதை படம் பிடித்து மிரட்டியதால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். 
 
கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்துக்கொண்டார். அவர்கள் வசிக்கும் தெருவில் காய்கறி வியாபாரம் செய்யும் இளைஞர் ஒருவர் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், மாணவியோ காதலை ஏற்கவில்லை. 
 
இதனால் மாணவி குளிக்கும் போது வீடியோ எடுத்து அதனை காட்டி மிரட்டி தன்னை காதலிக்க கோரியும் தன் ஆசைக்கு இணங்க கோரியும் வற்புறுத்தியுள்ளான். இதனால் மனமுடைந்த அந்த மாணவி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். 
 
இந்த விஷயம் மாணவியின் உறவினர்களுக்கு தெரிய வர காவல் நிலையத்தி புகார் அளிக்கப்பட்டு தற்கொலைக்குத் துாண்டியதாக வழக்குப் பதிவு செய்து அந்த இளைஞரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனாவால் பாதிப்பா? பொது சுகாதாரத்துறை விளக்கம்..!

ரேவண்ணா பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு, சிறப்பு புலனாய்வு குழு கடிதம்

மைசூருவில் நடிகை குத்திக் கொலை..! கணவருக்கு போலீசார் வலைவீச்சு..!!

இன்னும் சிலமணி நேரத்தில் 20 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

தமிழகத்தின் தண்ணீர் தேவை அண்டை மாநிலங்களை சார்ந்து உள்ளது- எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments