பொங்கல் வைப்பதில் தகராறு..! இளைஞர் அடித்துக் கொலை! – 5 பேர் கைது!

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (09:49 IST)
சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் பொங்கல் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திரிபுவனம் அருகே உள்ள இலந்தைக்குளம் கிராமத்தில் கடந்த 15ம் தேதி இரவு பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் அதே ஊரை சேர்ந்த கருப்பசாமி என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்துள்ளார்.

அப்போது அங்கு வந்த ஊராட்சி தலைவர் ரவி தன்னை கேட்காமல் பொங்கல் வைத்தது ஏன் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் கருப்பசாமிக்கும், ரவிக்கும் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ரவியின் மகன்கள் ஆயுதத்தால் கருப்பசாமியையும் அவரது நண்பர்களையும் தாக்கியுள்ளனர். இதில் கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் ரவி மற்றும் அவரது மகன்கள் உட்பட 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலை செய்யாமல் எப்படி சம்பளம் வாங்குவது.. ராஜினாமா செய்த ஐஏஎஸ் அதிகாரி.. முதல் நாளே தோப்புக்கரணம் போட்டு வைரலானவர்..

இனி ஓடிபி மட்டும் இருந்தால் பணம் அனுப்ப முடியாது.. பான் கார்டு வாங்க பிறப்பு சான்றிதழ் கட்டாயம்.. இன்று முதல் என்னென்ன மாற்றங்கள்?

போரில் குதிக்கிறது சவுதி அரேபியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கைப்பற்ற திட்டம்..!

பிரச்சாரத்துல விஜயை திட்டமாட்டேன்!.. அவர் குஷ்புவுக்கு தம்பி!.. சுந்தர்.சி ஃபீலிங்!..

AI வளர்ச்சி!.. அதிர்ச்சி!. 30 ஆயிரம் பேரை வேலையிலிருந்து தூக்கிய Oracle!..

அடுத்த கட்டுரையில்
Show comments