Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Yellow Alert! இன்று 19 மாவட்டங்களை படுத்தி எடுக்கப்போகும் வெயில்! – எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

Prasanth Karthick
வியாழன், 2 மே 2024 (10:06 IST)
தமிழ்நாட்டில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று 19 மாவட்டங்களில் வெயில் தாக்கத்திற்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாட்டில் ஏப்ரல் தொடக்கம் முதலே வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. தற்போது மே தொடங்கியுள்ள நிலையில் அக்னி நட்சத்திரமும் நெருங்கி வருவதால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து வருகிறது. இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் 19 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

ALSO READ: இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.640 உயர்வு..!

அதன்படி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments