Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்நாட்டிற்கு 3 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்! சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Chennai Rain

Mahendran

, சனி, 13 ஜூலை 2024 (13:20 IST)
தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்மேற்கு பருவ மழை காரணமாகவும் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாகவும் சென்னை உட்பட தமிழகத்தின் சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது என்பது இதனால் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ஜூலை 13, 15, 16 ஆகிய மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மூன்று நாட்களிலும் 7 முதல் 11 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே மேற்கண்ட 3 நாட்களில் தமிழகத்தில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுகவினர் வாழ்வில் முதல் முறையாக திமுகவிற்கு வாக்களித்துள்ளனர்: கேசி பழனிசாமி