Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமல்லபுரம் அருகே கார் விபத்து வழக்கு.. நடிகை யாஷிகா ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜர்..!

Mahendran
செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (12:45 IST)
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளான நிலையில் இது குறித்த வழக்கில் அவர் என்று நீதிமன்றத்தில் ஆஜரானதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் யாஷிகா ஆனந்த் தனது தோழி மற்றும் ஆண் நண்பர்களுடன் பாண்டிச்சேரி சென்று திரும்பிய போது மாமல்லபுரம் அருகே திடீரென விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் யாஷிகா ஆனந்த் நெருங்கிய தோழி பவானி ஷெட்டி என்பவர் சம்பவ இடத்திலேயே காலமான நிலையில் யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது இரு ஆண் நண்பர்களும் படுகாயம் அடைந்து அதன் பின் சிகிச்சை பெற்று மீண்டு வந்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு தற்போது செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இன்று யாஷிகா ஆனந்த் நேரில் ஆஜரானதாகவும் அவரிடம் விசாரணை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

65 வயது எம்பியை மணந்த 51 வயது பெண் எம்பி.. ஜெர்மனியில் ரகசிய திருமணம்..!

RCB வெற்றி விழா குறித்து முன்பே எச்சரித்த போலீஸ்? கண்டுகொள்ளாத கர்நாடக அரசு? - அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments