Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகனை கொலை செய்த பிரபல எழுத்தாளர் திடீர் மரணம்

Webdunia
திங்கள், 11 ஜூன் 2018 (07:40 IST)
'சீவலப்பேரி பாண்டி' திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதியவரும் பிரபல எழுத்தாளருமான சவுந்திரபாண்டியன் மகனை சுத்தியால் அடித்து கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் இருந்த நிலையில் திடீரென இன்று உடல்நல குறைவால் மரணம் அடைந்தார்.
 
எழுத்தாளரும் திரைப்பட வசனகர்த்தாவுமான சவுந்திரபாண்டியன் கடந்த மாதம் தனது மகனை சுத்தியால் அடித்து கொலை செய்தார். இதனால் போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர் மதுரையில் சிறையில் அடைக்கபப்ட்டிருந்தார்.
 
இந்த நிலையில் அவருக்கு நேற்று திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன்று காலமானார். அவருடைய மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
போதைக்கு அடிமையான மகன் விபின் சொத்து தொடர்பாக தகராறு செய்ததால்  ஆத்திரமுற்ற சவுந்திரபாண்டியன் , மகன் விபினை சுத்தியலால் அடித்து கொன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments