Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல எழுத்தாளர் தாக்கப்பட்டார்:தோசை மாவுக்காக சண்டை

Webdunia
சனி, 15 ஜூன் 2019 (10:38 IST)
பிரபல எழுத்தாளர் ஜெயமோகன், மளிகை கடைகாரருடன் நடந்த வாக்குவாதத்தில், ஜெயமோகன் தாக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.


எழுத்தாளர் ஜெயமோகன் விஷ்ணுபுரம், வெண்முரசு, போன்ற பல நாவல்களை எழுதியுள்ளார். தற்போது கடல், 2.0 உட்பட,  இன்னும் பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதிவருகிறார்.

எழுத்தாளர் ஜெயமோகன், நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் வசித்துவருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அவரது வீட்டிற்கு அருகில் உள்ள மளிகை கடையில் தோசை மாவு வாங்கியுள்ளார். வாங்கிய தோசை மாவு புளித்து போயிருந்ததால் மளிகை கடைக்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த வாக்குவாதத்தின் போது கடைக்காரர், ஜெயமோகனை தாக்கியுள்ளார். கடைக்காரர் தாக்கியதில் ஜெயமோகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எனவே ஜெயமோகன், பார்வதிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏற்கனவே எழுத்தாளர் ஜெயமோகன், பல எழுத்தாளர்களுடன் பலமுறை வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேமுதிகவோடு கூட்டணி வைப்பவர்களுக்கு வெற்றி! யாருடன் கூட்டணி? - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

வாக்குரிமை மட்டுமல்ல.. ரேசன் அட்டையையும் இழக்க நேரிடும்: ராகுல் காந்தி எச்சரிக்கை..!

வரதட்சணை கொடுமைக்காக செவிலியர் உயிருடன் எரிப்பு.. கணவர் உள்பட 6 பேர் தலைமறைவு..!

அமைச்சர், எம்.எல்.ஏவை ஓட ஓட அடித்து விரட்டிய பொதுமக்கள்.. உயிரை காப்பாற்ற ஓட்டம்..!

சமூகநீதின்னா என்னான்னு பீகார் பயணத்துக்கு பிறகாவது புரியட்டும்! - மு.க.ஸ்டாலின் குறித்து அன்புமணி!

அடுத்த கட்டுரையில்
Show comments