Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புழுதி புயலில் சிக்கி 13 பேர் பலி – உ.பியில் சோக சம்பவம்

Webdunia
சனி, 15 ஜூன் 2019 (10:31 IST)
நாடெங்கும் ஒருபக்கம் வறட்சியிலும், வெயிலிலும் கனன்று கொண்டிருக்க, மற்றோரு புறம் புயலும், மழையும் சோதித்து வருகின்றன. ஆனால் உத்தர பிரதேசத்தின் நிலைமை வேறு. ஏற்கனவே மழை இல்லாமல் தண்ணீர் பஞ்சத்தால் தத்தளிக்கும் மக்களுக்கு மேற்கொண்டு வேதனையை கொடுத்து வருகிறது புழுதி புயல்.

உத்தர பிரதேசத்தின் பல பகுதிகளில் அனலையும், மண்ணையும் கக்கும் புழுதி புயல் பல இடங்களில் வீசி வருகிறது. முக்கியமாக சித்தார்த்தா நகர் பகுதியில் வீசிய புயலில் சிக்கி 13 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பல கால்நடைகள் உயிரிழந்ததோடு 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து உள்ளன. இது மட்டுமல்லாமல் இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த புழுதி புயல் தொடரும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு தனது இரங்கல்களை தெரிவித்த உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நிவாரணமாக குடும்பத்துக்கு தலா 4 லட்ச ரூபாய் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தைலாபுரம் vs பனையூர்! போட்டிக்கு மீட்டிங் போட்ட அன்புமணி! - இறுதி கட்டத்தை எட்டும் போர்!

சென்னை அருகே சாலையில் திடீர் பிளவு.. பூகம்பம் வந்தது போல் இருந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

அஜித்குமார் கொலை வழக்கு: சிபிஐக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

அவர் பாதையில்? பாமக மேடையில் ராமதாஸ் மகள் காந்திமதி.. அன்புமணி ஆப்செண்ட்! - அடுத்தடுத்து பரபரப்பு!

ரயில் விபத்திற்கு கடலூர் கலெக்டர் தான் காரணமா? தெற்கு ரயில்வே அதிகாரி அறிக்கையால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments