Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.5 லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு ஒரே ஒரு டீ மட்டும் குடித்த தொழிலாளி

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2017 (13:11 IST)
ரயில் பயணி ஒருவர் தவறவிட்ட ரூ.5 லட்சம் உள்ள பணப்பையை உரியவரிடம் சேர்த்து அதற்கு கைமாறாக ஒரே ஒரு டீ மட்டும் பெற்றுக்கொண்ட நேர்மையான சுமை தூக்கும் தொழிலாளி ஒருவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



 
 
சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த பொய்யாமொழி என்பவர் தாம்பரம் ரயில் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் ரயிலில் பயணி ஒருவர் தவறிவிட்ட பையை கண்டெடுத்துள்ளார். அந்த பையில் ரூ.5 லட்சத்திற்கும் மேல் இருந்தும் அதனை ரயில்வே போலிசாரிடம் நேர்மையாக ஒப்படைத்துள்ளார். ரயில்வே போலிசார், பணப்பையை தவறவிட்ட பயணியை வரவழைத்து அவரிடம் அந்த பணப்பையை சேர்த்தனர்.
 
பணப்பையை நேர்மையாக ஒப்படைத்த பொய்யாமொழி, பயணி கொடுத்த பரிசை வாங்க மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக ஒரே ஒரு டீ மட்டும் வாங்கி கொடுக்குமாறு கேட்டுக்கொண்டாராம். இதுமட்டுமின்றி இதேபோல் பலமுறை பயணிகள் தவறவிட்ட பொருட்களை அவர்களுக்கு லட்டர் போட்டு வரவழைத்து கொடுத்திருக்கின்றாராம் இந்த பொய்யாமொழி. பெயருக்கு ஏற்றவாறு நேர்மையாக வாழ்ந்து வரும் பொய்யாமொழிக்கு ரயில்வே துறை நினைவுப்பரிசு வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments