Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவசங்கர் பாபாவை முற்றுகையிட முயன்ற மகளிர்: நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு!

சிவசங்கர் பாபாவை முற்றுகையிட முயன்ற மகளிர்: நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு!
, வியாழன், 17 ஜூன் 2021 (18:25 IST)
பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிவசங்கர் பாபா நேற்று டெல்லியில் சிபிசிஐடி போலீசார் கைது செய்த நிலையில் சற்று முன்னர் அவர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார் 
 
இதனை அடுத்து அவர் அவரை சிறைக்கு கொண்டு செல்ல போலீசார் தயாராகினர். அப்போது சிவசங்கர் பாபாவை முற்றுகையிட மகளிர் அமைப்பினர் முயற்சி செய்ததால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசாருக்கும் மகளிர் அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
பெண்குழந்தைகளை தவறான நோக்கத்துடன் பாலியல் பாலியல் தொல்லை கொடுத்த சிவசங்கர் பாபாவை அடிப்பதற்காக கையில் செருப்பு மட்டும் துடைப்பத்தை வைத்துக்கொண்டு ஆவேசமாக இருந்த மகளிர் அமைப்பினரை போலீசார் மிகவும் கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தற்கொலை மிரட்டல் விடுத்த மீராமிதுனுக்கு போலீஸார் அறிவுரை!