Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாலை பாதுகாப்பு பணிகளில் பெண் போலீஸாரை பணியமர்த்த வேண்டாம்: டிஜிபி உத்தரவு!

சாலை பாதுகாப்பு பணிகளில் பெண் போலீஸாரை பணியமர்த்த வேண்டாம்: டிஜிபி உத்தரவு!
, ஞாயிறு, 13 ஜூன் 2021 (11:47 IST)
சாலை பாதுகாப்பு பணிகளில் பெண் போலீஸாரை பணியமர்த்த வேண்டாம்: டிஜிபி உத்தரவு!
இனிமேல் சாலை பாதுகாப்பு பணிகளில் பெண் போலீசார்களை பணியில் அமர்த்த வேண்டாம் என  என டிஜிபி அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு பெண் போலீசார் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
 
சாலை பாதுகாப்பு பணிகளில் பெண்கள் பெண் காவலர்களை ஈடுபடுத்த வேண்டாம் என டிஜிபி திரிபாதி சற்றுமுன் அறிவித்துள்ளார். சாலைகளில் பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்கள் காத்திருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் காவல் துறைக்கும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த அறிவுறுத்தலை தொடர்ந்து டிஜிபி திரிபாதி அவர்கள் சற்று முன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்
 
பெண் போலீசார் சாலைகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும்போது அவர்களுக்கு உடல் ரீதியிலும் மன ரீதியிலும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதை அடுத்து தற்போது பெண் போலீசாரின் நலனை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உத்தரவை அடுத்து முதல்வருக்கும் டிஜிபிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனாவை தோலுரித்த இந்திய வம்சாவளி பத்திரிக்கையாளர்! – புலிட்சர் விருது அறிவிப்பு!