Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வழிப்பறி முயற்சியில் பெண் உட்பட முதியவர் பலி: பட்டிணம்பாக்கத்தில் பயங்கரம்

வழிப்பறி முயற்சியில் பெண் உட்பட முதியவர் பலி: பட்டிணம்பாக்கத்தில் பயங்கரம்
, செவ்வாய், 5 ஜூலை 2016 (08:51 IST)
பட்டிணம்பாக்க்கத்தில் வழிப்பறி செய்ய முயற்சித்த இளைஞரிடம் பைக்கில் இருந்து தப்ப முயன்ற பெண் முதவியவர் மீது மோதியதில் அந்த பெண் உயிரிழந்தார்.


 

 

 
பட்டிணம்பாக்கத்தில் நந்தினி என்ற பெண் அவரது உறவினர் பெண் ஒருவருடன் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்று ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுத்து விட்டு திரும்பியுள்ளார். அவர் ஏடிஎம்-ல் பணம் எடுப்பதை கருணாகரன் என்பவர் நோட்டம் செய்து கொண்டு இருந்துள்ளார்.
 
நந்தினி மற்றும் அவரது உறவினர் பெண் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது, கருணாகரன் இருசக்கர வாகனத்தில் துரத்தியுள்ளான். குடிபோதையில் இருந்த கருணாகரன் நந்தினியிடம் வழிப்பறி செய்யவும் முயன்றுள்ளான். 
 
இதில் பயந்துபோய் நந்தினி வாகனத்தை வேகமாக ஓட்டியத்தில் சாலையில் ஒரு முதியவர் மீது மோதி நந்தினி மற்றும் முதியவர் படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். நந்தினியுடன் வாகனத்தில் சென்ற அவரது உறவினரான அந்த பெண் படுகாயம் அடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இச்சம்பவத்தை கண்ட அங்கிருந்த மக்கள் கருகாணகரனை அடித்து துவைத்து எடுத்தனர். காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த பின்னரே கருணாகரன் பொது மக்களிடம் தப்பியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னை கொன்று விடுவீர்களா? : ஆம்புலன்சில் அலறிய ராம்குமார்