Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்னை கொன்று விடுவீர்களா? : ஆம்புலன்சில் அலறிய ராம்குமார்

என்னை கொன்று விடுவீர்களா? : ஆம்புலன்சில் அலறிய ராம்குமார்
, செவ்வாய், 5 ஜூலை 2016 (08:39 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரை பாளையங்கோட்டை மருத்துவமனையிலிருந்து சென்னை அழைத்து வரும்போது பீதியுடன் இருந்த விவகாரம் வெளியே கசிந்துள்ளது.


 

 
அதாவது, ஆம்புலன்சில், மருத்துவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உட்பட பலத்த பாதுகாப்போடு ராம்குமார் சென்னை அழைத்து வரப்பட்டார். அன்று இரவு முழுவதும் ராம்குமார் தூங்கவே இல்லையாம். தன்னை எங்கே போலீசார் தன்னை என்கவுண்டர் செய்து விடுவார்களோ என்ற பயத்தில் பீதியுடன் முழித்தே இருந்தாராம். 
 
அதனைக் கண்ட மருத்துவர்கள் “நீ ஏம்பா முழிச்சிருக்கே.. தூங்கு” என்றார்களாம். ஆனால் ராம்குமாரோ “என்னைக் கொன்று விடுவீர்களா சார்? என்று போலீசாரிடம் கேட்டுள்ளார். ஒரு புள்ளையை கொன்று விட்டு உனக்கென்னடா உயிர் பயம். கம்முனு தூங்கு” என்றார்களாம் போலீசார்.
 
ஆம்புலன்ஸ் வண்டி திருச்சியை தாண்டிய போது, மரண பீதியில் உறைந்து போயிருந்தாராம் ராம்குமார். சென்னை வந்தபின்தான் ஓரளவு இயல்பான நிலைக்கு வந்தார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவாதி கொலையாளி ராம்குமாருக்கு கூலிப்படையுடன் தொடர்பு உள்ளதா?