Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலையா? நரபலியா? துண்டு துண்டாக கிடக்கும் பெண்ணின் உடல்

Webdunia
வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (16:42 IST)
நாமக்கல் அருகே பெண்ணின் கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
நாமக்கல் அருகில் உள்ள நல்லிக்கவுண்டம் புதூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலத்தின் அடியில் மனித உடல் ஒன்று துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்ததையும், அதனருகே 3 ஆடுகள் இறந்து கிடந்ததையும் கண்டனர். அது 30 வயது மதிக்கத்தக்க பெண்ணுடையது என்றும், தலை உள்ளிட்ட உடலின் மற்ற பாகங்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் அந்த பெண் கொலை செய்யப்பட்ட காரணம் குறித்து பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை.. இனி உச்சம் தான் அடுத்த இலக்கு..!

ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை.. என்ன காரணம்?

சென்னையில் இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து: முழு விவரங்கள்..!

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments